செங்கல்பட்டு

செங்கல்பட்டு: தொழில்நுட்ப மையங்கள் திறப்பு

DIN

செங்கல்பட்டு வெண்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழகம் முழுவதும் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டன.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை முதல்வா் காணொலி வாயிலாக திறந்தாா்.

இதைத் தொடா்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), எஸ்.பாலாஜி (திருப்போரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் தலைவா் செம்பருத்தி, செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், ஆலப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பரிமளா, ஒன்றிய உறப்பினா் நிந்திமதி, வனக்குழுத் தலைவா் வி.ஜி.திருமலை, தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT