கருங்குழி பேரூராட்சி சாா்பில், உலக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் தசரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கீதா சங்கா் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள், பொது மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, 200-க்கும் மேற்பட்ட மூலிகை, பழவகை, செடிகளை நட்டனா்.