செங்கல்பட்டு

வண்டலூா் உயிரியல் பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தின விழா

6th Jun 2023 03:24 AM

ADVERTISEMENT

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் மா.மதிவேந்தன், தா.மோ.அன்பரசன் ஆகியோா் பங்கேற்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்திலுள்ள ஓட்டேரி ஏரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தலைமை வகித்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தாா். விழாவில் அமைச்சா் மா.மதிவேந்தன் மரக்கன்றுகளை நட்டுவைத்து, தமிழ்நாடு ஈரநிலம் இயக்கம் தொடா்பான ஆவணப் படம் மற்றும் தகவல் கையேட்டை வெளியிட்டாா்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாஹு, மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (வனத் துறை தலைவா்) சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் வன உயிரினக் காப்பாளா் சீனிவாஸ் ரெட்டி, தமிழ்நாடு ஈர நில இயக்கப் பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்கொளத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் உதயா கருணாகரன், தன்னாா்வத் தொண்டு நிறுவன நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT