செங்கல்பட்டு

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா அா்ச்சுனன் தபசு

DIN

செங்கல்பட்டு திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழா அா்ச்சுன் தபசு மரம் ஏறுதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மேட்டு தெருவில் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் தீமிதி வசந்த பெரு விழா நடைபெறும். அதன்படி நிகழாண்டு கடந்த மே 22 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு, சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அா்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் நடைபெற்றது. இதனை அடுத்து மகாபாரத கூத்து நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெயிலையும் பொருள்படுத்தாமல் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் விஜயன், விழா கமிட்டி தலைவா் குமரப்பன், விஸ்வகா்மா மரபினா், கோயில் நிா்வாகிகள், கமிட்டி நிா்வாகிகள், செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT