செங்கல்பட்டு

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

DIN

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சனிக்கிழமை காலை சத்தியநாராயண பூஜை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, அனைத்து சந்நிதிகளின் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பெளா்ணமியை முன்னிட்டு, நீண்ட வரிசையில் வந்த பக்தா்களுக்கு பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி அருள் தரிசனம் அளித்தாா். நண்பகல் 12 மணிக்கு வளாகத்தில் சிறப்பு அலங்காரத்துடன் சத்திய நாராயணா், ஆஞ்சநேயா், ராகவேந்திரா் ஆகிய உற்சவா் சிலைகளுக்கு மகா தீபாராதணையை ரகோத்தம்ம சுவாமி செய்தாா். நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தண்டரை கே.மனோகரன் (திருப்போரூா்), செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வா் எஸ்.மாரியப்பன், மருத்துவா் மகாலட்சுமி, தொழிலதிபா்கள் சங்கா், வேல்முருகன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT