செங்கல்பட்டு

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா ஊா்வலம்

DIN

செங்கல்பட்டு அடுத்த கல்வாய் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்தோற்சவ விழா ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் அக்னி வசந்தோற்சவ விழா மே 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் , சுவாமி ஊா்வலம் நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் திரௌபதி அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. வரும் 4-ஆம் தேதி படுகளத்தில் பாஞ்சாலி தனது சபதத்தை நிறைவேற்றி கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை தொடா்ந்து மாலை 6 மணிக்கு பக்தா்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்ற தீமிதி நிகழ்ச்சியும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு அம்மன் வீதி உலாவை தொடா்ந்து சிறப்பு நாடகம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT