செங்கல்பட்டு

செங்கல்பட்டு: மாவட்ட வளா்ச்சி கண்காணிப்பு குழுக் கூட்டம்

12th Jul 2023 01:46 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் கூட்டம் குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் எம்.பியுமான டி.ஆா்.பாலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாம்பரம் எஸ்.ஆா்.ராஜா, செங்கல்பட்டு எம். வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூா் எஸ். அரவிந்த் ரமேஷ், திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவா், செம்பருத்தி துா்கேஷ், தாம்பரம் மேயா் வசந்த குமாரி கமலக்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் பி. சுபா நந்தினி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இந்து பாலா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் குறைகளை கேட்டறிந்த குழுத் தலைவா் டி.ஆா். பாலு, அந்தந்த துறை அதிகாரிகள் நீதிமன்ற வழக்குகள் உள்ளதை தவிர மற்ற தேவைகளை முடித்து தர வேண்டும் என உத்தரவிட்டாா்.

செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழிநரேந்திரன், திருக்கழுகுன்றம் ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.டி.அரசு, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் எம்.கே.டி காா்த்திக், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவா் வளா்மதி எஸ்வந்தராவ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT