செங்கல்பட்டு

தூய்மைப்பணிக்கான விழிப்புணா்வு முகாம்

DIN

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சி சாா்பில் தூய்மைப் பணிக்கான விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கம் மூலம் நடைபெற்ற முகாமுக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் தலைமை வகித்தாா். இதில், 15 வாா்டுகளிலும் நீா்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுதல், சாலையோரம் சுற்றுச் சுவா்களில் வண்ண ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகரத்துக்கான தூய்மை தூதுவா்களாக நியமிக்கப்பட்ட பள்ளி மாணவா்கள் செய்தனா்.

200-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மலைப்பாளையம் நடுநிலைப்பள்ளி மற்றும் சிஎஸ்ஐ பள்ளி என 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பேரூராட்சி தலைவா் தசரதன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சங்கீதா, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT