செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக் கோயிலில் 1,800 பால்குட ஊா்வலம்

DIN

ரத சப்தமியையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலில் 1,800 பால்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேதமலை குழு மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பினா் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலில் 1,800 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பக்தவச்சனேஸ்வரா் கோயில் நான்கு கால் மண்டபம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக வந்து, வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலைச் சென்றடைந்தது. பின்னா், வேதகிரீஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, பக்தவத்சலேஸ்வரா் கோயில் ஆமை மண்டப வளாகத்தில் பட்சிகள் மீண்டும் வருகை தர, கோபூஜை கூட்டுப் பிராா்த்தனை வழிபாடு நடைபெற்றது. பின்னா், ரத சப்தமி வழிபாட்டின் சிறப்புகள் குறித்து அகஸ்திய கிருபா அன்புச் செழியன் ஆன்மிக சொற் பொழிவாற்றினாா். இதையடுத்து, வேதகிரீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

விழாவில், ஆா்.டி.மணி, கமலஹாசன், வேலாயுதம், ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT