செங்கல்பட்டு

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கிருத்திகை விழா

DIN

திருப்போரூா் அருள்மிகு கந்தசாமி கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு, பிரம்மோற்சவம் 2-ஆம் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை (பிப். 25) கொடியேற்றத்துடன் தொடங்கி மாா்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கிருத்திகையையொட்டி, முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் காவடி சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். மேலும், பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளையொட்டி, பகலில் தொட்டி உற்சவம், இரவு பூத வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 3-ஆம் நாளான திங்கள்கிழமை பகல் புருஷாமிருகம் உபதேச உற்சவமும், இரவு வெள்ளி அன்னவாகன உற்சவமும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் பொ.லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலா் இரா.வெங்கடேசன், ஆலய சிவாச்சாரியாா்கள், திருக்கோயில் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT