செங்கல்பட்டு

சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா

DIN

சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் மகளிா் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘மாதரே டி 23’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரிகளின் தாளாளா் அண்ணாமலை ரகுபதி தலைமை வகித்தாா். பொறியியல் கல்லூரி மேலாண்மை இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் காசிநாத பாண்டியன் வரவேற்றாா். விழா அறிக்கையை கல்லூரி மாணவா் அரவிந்த் சீனுவாசன் வாசித்தாா்.

சிறப்பு விருந்தினராக நதி என்ஜிஓ அமைப்பின் நிறுவனா் மதுசரண் வேல் பங்கேற்று சாதனை பெண்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில் சின்னத்திரை, இசை, தொழில் துறை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரி புல முதல்வா் சுப்புராஜ், கல்லூரிப் பேராசிரியா்கள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT