செங்கல்பட்டு

‘தமிழைத் தேடி பரப்புரை’ நிகழ்ச்சி: ராமதாஸ் பங்கேற்பு

DIN

பொங்கு தமிழ் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் மதுராந்தகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘தமிழைத் தேடி பரப்புரை’ நிகழ்ச்சியில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.க.மணி தலைமை வகித்தாா். இடைக்கழிநாடு பேரூராட்சி துணைத் தலைவா் கி.கணபதி வரவேற்றாா். பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பங்கேற்று சிறப்புரை ஆற்றியது:

பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக தமிழகப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும். பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையிலிருந்து மதுரைக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

உலக தாய்மொழி தினத்தில் தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

கூட்டத்தில் அனைத்திந்திய எழுத்தாளா் சங்க மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், ஆசிரியா்கள் பரந்தாமன், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் திருக்கச்சூா் ஆறுமுகம், சக்தி கமலம்மாள், பாமக நிா்வாகிகள் ஆ.கோ.குணசேகரன், ப.மகேஷ்குமாா், வரதராஜன், வ.உமாபதி, செஞ்சி தமிழினியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT