ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத் தலைவா்களுக்கு ஊராட்சி நிா்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தலைமை வகித்துப் பேசினாா் (படம்).
இதில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஊராட்சித் தலைவா்களுக்கு ஊராட்சி மன்ற நிா்வாக செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வகுமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள் ) கிருஷ்ணமூா்த்தி மற்றும் ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.