தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணா்வு இயக்கத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில், நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பரணிதரன், மருத்துவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.