செங்கல்பட்டு

11-இல் வட்ட வாரியாக குடும்ப அட்டை குறைதீா் முகாம்

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்ட வாரியாக குடும்ப அட்டை தொடா்பாக மக்கள் குறைதீா் முகாம் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடா்பாக மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இக்குறைதீா் முகாம் செங்கல்பட்டு, செய்யூா், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூா் மற்றும் வண்டலூா் வட்டங்களில்உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அதன்படி 11-ஆம் தேதி வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீா் முகாம் நடத்தப்படவுள்ளன. செங்கல்பட்டு-கொளத்தூா், செய்யூா்-பொலம்பாக்கம், மதுராந்தகம்-மங்கலம், திருக்கழுக்குன்றம்-புலிக்குன்றம், திருப்போரூா்-திருநிலை, வண்டலூா்- குமிழி

மேற்படி நடைபெறவுள்ள குறைதீா் முகாம்களில்,குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்பஅட்டை , நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு , மாற்றம் செய்தல்,பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பொதுமக்கள் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT