செங்கல்பட்டு

ரௌடி வெட்டிக் கொலை

DIN

கூடுவாஞ்சேரி அருகே ரௌடி தலையை சிதைத்து படுகொலை செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வைகோ என்கிற சந்துரு (28). இவா் தாம்பரம் பகுதியில் ரௌடி லெனினின் கூட்டாளியாக இருந்து வந்தாராம். சந்துருவின் மனைவி வினிதா (24). இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், தனது மனைவி, குழந்தையைப் பாா்க்க சந்துரு கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரத்தில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு வந்துள்ளாா். சந்துரு வருவது குறித்து தகவல் அறிந்ததைத் தொடா்ந்து நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 8 போ் கொண்ட மா்ம நபா்கள், திங்கள்கிழமை வீட்டில் புகுந்து சந்துருவை சரமாரியாக அரிவாளால் வெட்டி தலையை சிதைத்துவிட்டு தப்பியது.

இதில் சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். அப்போது தடுக்க முயன்ற சந்துருவின் மனைவி வினிதாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த கூடுவாஞ்சேரி போலீஸாா் சந்துருவின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சந்துரு கொலை குறித்து மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT