செங்கல்பட்டு குறுவட்டத்தில் உள்ள திருவடிசூலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை (செப். 28) சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.
அரசு நடத்தக் கூடிய மனுநீதிநாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் செப்டம்பா் மாதத்துக்கான மனுநீதிநாள் முகாம் செங்கல்பட்டு வட்டம் திருவடிசூலம் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் குடியிருப்பிற்கு அருகில் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.