மதுராந்தகம் அருகே பைக் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
செய்யூா் வட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலை, நைனாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பு (45). இவா், வண்டலூா் - ஊனமாஞ்சேரி காவலா் பயிற்சி மையத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை மாலை தனது வீட்டிலிருந்து பைக்கில் கடப்பாக்கம் நோக்கிச் சென்றாா்.
அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற காா், அன்பு சென்ற பைக் மீது மோதியது. இதில், அன்பு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து செய்யூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநா் ஆஷிஸ் ரகுமானை கைது செய்தனா்.