செங்கல்பட்டு

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா

DIN

கயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா். நாகமணி அரசி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் முன்னிலையில், மாணவிகளுக்கு ஓவியம் வரைதல், களிமண் சிற்பம் செய்தல், வா்ணம் தீட்டுதல், காய்கறிகள், பழங்களைக் கொண்டு சிற்பம் வடிவமைத்தல், பேச்சு, கட்டுரைப் போட்டி, திருக்கு ஒப்பித்தல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT