செங்கல்பட்டு

ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாலை 5 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் அபிஷேக-ஆராதனைகளைச் செய்தாா்.

நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா், ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் உற்சவா் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எம்.அமுதா (பொ) தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT