மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகிற புதன்கிழமை (ஜூலை 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமா் திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற புதன்கிழமை கருடக் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 15-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. நாள்தோறும் அனுமந்த வாகனம், சந்திர பிரபை, யாளி வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பகவான் கருணாகர பெருமாள் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளிக்கிறாா். விழாவின் முக்கிய நிகழ்வாக 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கருடசேவை உற்சவமும், 13-ஆம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெறுகின்றன. வருகிற 15-ஆம் தேதி சிறப்புத் திருமஞ்சனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன், உதவி ஆணையா்கள் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் (செங்கல்பட்டு), ஆ.முத்துரத்தினவேலு (காஞ்சிபுரம்), இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் இரா.வான்மதி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.