செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில், மருந்துக் கிடங்கு அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு கோட்டாட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, மருத்துவக் கல்லூரி முதல்வா் அனிதா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.