செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துக்குமரன். இவா், உடல்நலக்குறைவு காரணமாக பரிசோதனை செய்து கொண்டாா். அதில், அவருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் சிகிச்சை பெறுவதற்காக விடுப்பு எடுத்து சென்னை சென்றாா்.