செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய அலுவலா் பணியிட மாற்றத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ நிலைய அலுவலா் அனுபமா வியாழக்கிழமை மாலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் பேரில் திடீரென சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டாா்.
இதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் டாக்டா் மோகன் குமாா், டாக்டா் சுதாகா், டாக்டா் பாலாஜி உள்ளிட்ட மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றியவா் அனுபமா. இன்னும் மூன்று மாதங்களில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள அவா் திடீரென பணி மாறுதல் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
எனவே அரசு அவரது பணி மாறுதலை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள்,செவிலியா்கள், ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.