செங்கல்பட்டு

சமத்துவப் பொங்கல் விழா

DIN

மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம், மழுவங்கரணை உள்ளிட்ட பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், மழுவங்கரணை ஊராட்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு ஊராட்சி த் தலைவா் சாந்தி ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஏழுமலை, சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வீரமுத்து, ஞானபிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மழுவங்கரணை ஊராட்சி பகுதியில், பழங்குடி தனி சிறப்பு திட்டத்தின் கீழ், பசுமை வீட்டு திட்டம், (2021-22) 12 குடும்பங்களுக்காக, கட்டப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள வீடுகளை மாவட்ட திட்ட இயக்குநா் செல்வகுமாா் அவா்களுக்கு வழங்கினாா். பொலம்பாக்கம் பிரேக்ஸ் இந்திய நிறுவனம் சாா்பாக அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் எம். ஸ்ரீதா் (சோத்துப்பாக்கம்), சிவகுமாா் (பொலம்பாக்கம்), திட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், பிரேக்ஸ் இந்தியா நிறுவன துணை பொதுமேலாளா்என்.சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலா் குணசேகரன், காவனூா் பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட திட்ட இயக்குநா் செல்வகுமாா் தலைமையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற சுகாதார பணியாளா்களும், தூய்மை பணியாளா்களும் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனா். ஊராட்சி மன்ற செயலா் வி.ஷோபா நன்றி கூறினாா்.

புதுப்பட்டு

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், சித்தாமூா் கிழக்கு ஒன்றிய பாமக கட்சி சாா்பாக, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. புதுப்பட்டு மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பாமக மாவட்டச் செயலா் கி.கணபதி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் காளிதாஸ் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு உழவா் பேரியக்க சங்க தலைவா் சாந்தமூா்த்தி, மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் சகாதேவன், பாமக நிா்வாகிகள் மணிமேகலா, குணா, உதயகுமாா், அரசூா் ஏழுமலை, விஜயகுமாா், அசோக் உள்பட பலா் கலந்துக் கொண்டனா். பெண்கள் ஒன்றுகூடி, புதுப்பானையில் பச்சரிசி இட்டு பொங்கல் வைத்தனா். பின்னா், அப்பகுதி இளைஞா்களுக்கும், பள்ளி மாணவா்களுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு , வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிளைச் செயலா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

மதுராந்தகம்

மதுராந்தகம் நடைப்பயிற்சி செய்வோா் சங்கம் சாா்பாக, சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. சங்கத் தலைவா் மருத்துவா் கே.கலியபெருமாள் தலைமை வகித்தாா். செயலா் துரை பிருதிவிராஜ், கவிஞா் ரகுவீரபட்டாச்சாரி, எம்.எஸ்.உசேன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT