செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வகை மதுக் கடைகள் ஜன. 15, 18, 26 ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகள், உயர்ரக மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஜன.15 (திருவள்ளுவா் தினம்), ஜன.18 (வள்ளலாா் நினைவு தினம்) ஜன. 26 (குடியரசு தினம்) ஆகிய மூன்று தினங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றைய தினங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள், மதுபானக்கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக இதரவழிகளில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.