முன்களப்பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, அரசின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தும் பணி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது.
இதனை மருத்துவக்கல்லூரி முதல்வா் முத்துக்குமரன் தொடக்கிவைத்தாா். ஜன.13 வரை 67 போ் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துக்குமரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.