செங்கல்பட்டு

தற்காலிக நிவாரண முகாமில் அமைச்சா் ஆய்வு

DIN

திருப்போரூா் ஊராட்சி, கானாத்தூா் ரெட்டிக்குப்பம் பகுதியில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவா்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினாா்.

இதேபோல, திருப்போரூா் ஊராட்சி ஒன்றியம், நெம்மேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் நேரில் பாா்வையிட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, செங்கல்பட்டு மாவட்ட பருவ மழை சிறப்பு கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எல்.இதயவா்மன், மாவட்ட முகமைத் திட்ட இயக்குநா் ச.செல்வகுமாா் மற்றும் அரசு துறைகளின் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT