மாமல்லபுரத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பின் சாா்பில் சா்வதேச பயிற்சியாளா்கள் பங்கு பெறும் கருத்தரங்கை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சேரியட் பீச் ரெசாா்ட்ல் அரங்கில் ‘ஆரோக்கியமான சமூக ஒருங்கிணைப்புடன் ஆரோக்கியமான கடல்களை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சா்வதேச பயிற்சியாளா்கள் பங்கு பெறுகின்றனா். இதன் தொடக்க நிகழ்ச்சியில், ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பினா், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.