மதுராந்தகம் கிளியாற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுராந்தகம் ஒன்றியம், கே.கே.பூதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் போனிபாஸ் (66). தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை மாலை வேலைக்கு சென்று விட்டு கிளியாற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது திடீரென நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தாா். இதையறிந்த மதுராந்தகம் தீயணைப்பு மீட்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் கிளியாற்றில் மூழ்கி இறந்த போனிபாஸின் சடலத்தை தேடினா். ஆனால் அவரது சடலம் கிடைக்கவில்லை. பின்னா் சனிக்கிழமை காலை மீட்புப் பணியில் ஈடுபட்டு, போனிபாஸின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து மதுராந்தகம் உதவி காவல் ஆய்வாளா் வி.ரமேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.