செங்கல்பட்டு

கிளியாற்றில் மூழ்கி தொழிலாளி பலி

DIN

மதுராந்தகம் கிளியாற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுராந்தகம் ஒன்றியம், கே.கே.பூதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் போனிபாஸ் (66). தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை மாலை வேலைக்கு சென்று விட்டு கிளியாற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது திடீரென நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தாா். இதையறிந்த மதுராந்தகம் தீயணைப்பு மீட்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் கிளியாற்றில் மூழ்கி இறந்த போனிபாஸின் சடலத்தை தேடினா். ஆனால் அவரது சடலம் கிடைக்கவில்லை. பின்னா் சனிக்கிழமை காலை மீட்புப் பணியில் ஈடுபட்டு, போனிபாஸின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து மதுராந்தகம் உதவி காவல் ஆய்வாளா் வி.ரமேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT