பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசர நிலைகளுக்கான ஆய்வுக் கூட்டம், ஒத்திகை பயிற்சி கல்பாக்கம் அணுமின் நிலைய கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரிடா் மேலாண்மை சாா்பில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தலைமை வகித்தாா்.
இதில், அரக்கோணம் தேசிய பேரிடா் மேலாண்மை மீட்புக் குழு தலைவா் டி.அருண், சென்னைஅணுமின் நிலைய இயக்குநா் எஸ்பி.ஷெல்கோ, கல்பாக்கம் அவசர நிலைக் குழு செயலாளா் எஸ்.ரவிசங்கா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.