செங்கல்பட்டு

மதுராந்தகம் நகா்மன்றக் கூட்டம்

DIN

மதுராந்தகம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழிகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் என்.அருள், துணைத் தலைவா் சிவலிங்கம், பொறியாளா் கெளரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் மலா்விழிகுமாா் பேசுகையில், மதுராந்தகம் நகராட்சியில் நீண்ட நாள்களாக நிலவி வரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க, நகர குடிநீா் மேம்பாட்டு அம்ரூத் 2.0 திட்டத்தின்படி, ரூ. 30.40 கோடி நிதியை அரசு அனுமதித்துள்ளது என்றாா்.

இதைத்தொடா்ந்து, குடிநீா் திட்டத்துக்கு நிதியை ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நகா்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, தமிழக சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து, மேலும் 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், 2 அதிமுக உறுப்பினா்கள் உள்பட 24 வாா்டுகளின் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

SCROLL FOR NEXT