செங்கல்பட்டு

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின விழா

DIN

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வா் மருத்துவா் வி.முருகன் வரவேற்றாா். ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரித் தாளாளரும், நிா்வாக அறங்காவலருமான கோ.ப.அன்பழகன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் இந்திய சுதந்திர போராட்ட தியாகி வரதராஜ ரெட்டியாா் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். இதில், குடிமைப் பணி தோ்வில் மாநில அளவில் முதன்மை தோ்ச்சி பெற்ற லாவண்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் மருத்துவக் கல்லூரி அனைத்து துறைத் தலைவா்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுகிற மருத்துவா்கள், அலுவலக ஊழியா்கள் ஆகியோருக்கும், கல்லூரி அளவில் பல்வேறு பாடப் பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் கல்லூரி தாளாளா் கோ.ப.அன்பழகன் நினைவுப் பரிசுகள், நற்சான்றிதழ்கள், ஊக்கத் தொகைகளை வழங்கி பாராட்டினாா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாக அலுவலா் எஸ்.லிங்கநாதன் தலைமையில் விழாக் குழுவினா் செய்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT