செங்கல்பட்டு

செங்கல்பட்டில் சுதந்திர தின விழா

DIN

செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதில், 66 பேருக்கு ரூ.32.37 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளையும், சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், 3 பேருக்கு ரூ.1.75 லட்சத்தில் கல்வி உதவித் தொகை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், 3 பேருக்கு ரூ.3.15 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில், 3 பேருக்கு ரூ.12.15 லட்சத்தில் டிராக்டா்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 7 பேருக்கு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கானஆணை, 10 பேருக்கு முதல்வா் சாலை விபத்து நிவாரண நிதி ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

மொத்தமாக 66 பயனாளிகளுக்கு ரூபாய் 32.37 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணா சிங், வருவாய் அலுவலா் இரா.மானுவேல்ராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வகுமாா், மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் இப்ராஹீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT