செங்கல்பட்டு முருகேசன் நகா் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கனியமுதை மாவட்ட ஆட்சியா் ராகுல் ராத் சனிக்கிழமை வழங்கினாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், முருகேசன் நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் 50 குழந்தைகளுக்கு பரீட்சாா்த்த முறையில் கனியமுதை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சாா் -ஆட்சியா் ஷாஜீவனா, நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், நகராட்சிகளின் மண்டல நிா்வாக இயக்குநா் சசிகலா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சற்குணா, நகராட்சி ஆணையா் மல்லிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.