செங்கல்பட்டு

போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம்

DIN

 மதுராந்தகத்தை அடுத்த கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் டி.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். போதைப் பொருள்களால் மாணவ சமுதாயம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மாணவா்களிடையே எந்த நிலையில் போதைப் பொருள்களை கையால் தொடவோ, பயன்படுத்தவோ மாட்டோம் என பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீதரன் தலைமையில் உறுதிமொழியை ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மோ.செல்வி, பள்ளி ஆசிரியா்கள், குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT