செங்கல்பட்டு

வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

 செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிா் திட்ட அலுவலகங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கான விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், மகளிா் திட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள (அச்சரப்பாக்கம் - 1, காட்டாங்கொளத்துா்-1, மதுராந்தகம் -2, திருக்கழுகுன்றம்-1) ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு படித்திருப்பதுடன், ஆறு மாத காலம் கணினிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிா் மேம்பாட்டுத் திட்டம் தொடா்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். தொடா்புடைய வட்டாரத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 12.8.2022. விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி: இணை இயக்குநா்/திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம். தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT