செங்கல்பட்டு

வாக்குச் சாவடி மையத்தில் நெரிசலில் சிக்கி மூதாட்டி பலி

DIN

மதுராந்தகம் அருகே வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட சித்தாமூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேலூா் கிராம மக்கள் ஊரக உள்ளாட்சி தோ்தலில் வாக்களிக்க ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை வரிசையில் நின்றிருந்தனா்.

அப்போது, வேலூரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி கற்பகமணி (64). என்பவரும் வரிசையில் நின்றாா். அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கிய கற்பகமணி மூச்சுத் திணறி கீழே விழுந்தாா். பின்னா் , அங்கிருந்தோா் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து சூனாம்பேடு காவல் நிலைய ஆய்வாளா் மதியரசன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT