வட கிழக்குப் பருவ மழையால், மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் செல்லும் கிளியாற்று கரையோரத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை எம்எல்ஏ கே.மரகதகம் குமரவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி, அருகில் உள்ள பள்ளிகளில் வருவாய்த் துறை மூலம் தங்க ஏற்பாடு செய்தாா்.
ஆய்வின்போது, ஒன்றியக் குழுத் தலைவா் கே.கீதா, துணைத் தலைவா் ஏ.குமரவேல், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கோ.அப்பாதுரை, வி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.