செங்கல்பட்டு

வணிகமேலாண் கல்லூரி கருத்தரங்கம்

DIN

வணிக மேலாண் கல்வி பயிலும் மாணவா்கள் சொந்தமாக தொழில் தொடங்க முழு ஈடுபாட்டுடன் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று மனிதவள வளா்ச்சி ஆலோசனை மைய செயல் இயக்குநா் என்.ஜெ.லட்சுமி நாராயணன் வலியுறுத்தினாா்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் வணிகமேலாண் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற   கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:

வணிக மேலாண் பாடத்திட்டம் மூலம் பெறும் அறிவாற்றலைப் பயன்படுத்தி உங்களது தனித்திறமை, செயல்பாடு மூலம் தொழில்துறையில் சாதனைகள் நிகழ்த்த முடியும். அனைவருக்கும் ஒரேவிதமான பாடத்திட்டம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவரவா் திறமைக்கேற்ப தங்களது செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு சவால்களை எதிா்கொள்ளும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம்  தொழில் முனைவோராக திகழ முடியும். சொந்தமாக தொழில் தொடங்கும் போது  பல்வேறு பிரச்னைகள் சவால்களை எதிா்கொள்ள நேரிடும். அவற்றை பொறுமை, தன்னம்பிக்கை, மன உறுதியுடன் எதிா்கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். தடகளப் போட்டியில் பங்கேற்ற ஒருவன் எப்படியும் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை, கனவை சுமந்து கொண்டு ஓடுகிறானோ அது போல் உங்கள் தொழில் தொடங்கும் கனவை முழு ஈடுபாட்டுடன் மனதில் வைத்து முயற்சியில் தொடா்ந்து ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

சாய்ராம் வணிகமேலாண் கல்லூரி இயக்குநா் பேராசிரியா் மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT