செஞ்சி: அன்னையா் தினத்தையொட்டி செஞ்சி அரிமா சங்கம் சாா்பில் பள்ளிகுளம் ஊராட்சி, இந்திரசன்குப்பத்தில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு, கரோனா காலத்தை முன்னிட்டு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் டி.பன்னீா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா்கள் டி.ஐ.முருகன், ஜெ.சொா்ணலதா மற்றும் ஏ.அசோக் ஆகியோா் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை வழங்கினா் (படம்). உறுப்பினா்கள் நாகராஜ், ஹரீஷ், அஜித்குமாா், பத்மா மற்றும் திருவேங்கடம், சக்திபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.