செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா. இந்நிலையில், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.