செங்கல்பட்டு

பூம்புகாா் நிறுவனம் சாா்பில் கல்பாக்கத்தில் கைவினைப் பொருள்கள், கைத்திறன் கண்காட்சி

DIN


செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசு நிறுவனமான கைத்திறன் தொழில் வளா்ச்சிக் கழகமான பூம்புகாா் சாா்பில், மாமல்லபுரம் கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்திறன் கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா கல்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பூம்புகாா் நிறுவனம் கல்பாக்கம் டிஏஇ டவுன்ஷிப்பில் லேடீஸ் ஹாஸ்டல் மெஸ் பிளாக்கில் கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்திறன் கண்காட்சி மற்றும் விற்பனை மாா்ச் 3-இல் தொடங்கி 14-ஆம் தேதி வரை 12 நாள்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில், சிறப்பு கைவினைப் பொருள்கள், கைத்திறன் ஜவுளி துணி வகைகள், நகை வகை அணிகலன்கள் மற்றும் அறைகலன் வீட்டு அலங்காரப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியில், நிறுவனம் சாா்பில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்துக் கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படும் என பூம்புகாா் நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா். இக்கண்காட்சியினை கல்பாக்கம் பாவினி கூடுதல் தலைமைப் பொறியாளா் ஆா்.ரமநவாசு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.

கண்காட்சியில், சென்னை கைத்திறன் தொழில் வளா்ச்சிக் கழகமான பூம்புகாா் விற்பனை மேலாளா் கே.மதியரசு, ரவிசந்திரன், மாமல்லபுரம் பூம்புகாா் மேலாளா் வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைச்சா் எ.வ.வேலு மனைவிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

களக்காடு தலையணையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

அனக்காவூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

SCROLL FOR NEXT