செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மலையடி வேம்பாக்கம் பகுதியில் விவசாயகிணற்றில் மிதந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். மேற்கொண்டனா்.
மலையடி வேம்பாக்கத்தைச் சோ்ந்த குணசேகரன் மகள் சுவேதா (21) தனியாா் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 3 நாள்களுக்கு முன் சுவேதா வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டாா்.. அவரை பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் சுவேதாவின் சடலம் மிதப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த செங்கல்பட்டு கிாரமிய போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.