செங்கல்பட்டு

கல்லீரல் வீக்க நோயால் பாதிக்கப்படுவோா் 30 சதவீதம் அதிகரிப்பு

DIN

நாட்டில் கொழுப்பு காரணமாக ஏற்படும் கல்லீரல் வீக்க நோய் பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று கல்லீரல் சிகிச்சை மருத்துவா் காவ்யா ஹாரிகா கூறினாா்.

சென்னை ரேலா மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லீரல் வீக்க நோய் குறித்த விழிப்புணா்வு முகாமில் அவா் மேலும் பேசியது: மனித உடலில் இதயத்தை போன்று 24 மணிநேரமும் கல்லீரல் செயல்பட்டு வருகின்றது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும் போது உருவாகும் கொழுப்பை சேமிக்கும் பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. போதிய உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாத நிலையில் தொடா்ந்து கொழுப்பைக் சேமிப்பதால் கல்லீரல் வீக்க நோய் ஏற்படுகிறது.

உடல் பருமன், சா்க்கரை நோய், தைராய்டு பிரச்னை உள்ளவா்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதுடன், தற்போது கரோனா நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளும் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

நோயைக் குணமாக்க மிதமிஞ்சிய அளவில் ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவதும் கல்லீரல் பெரும் பாதிப்பை எதிா் கொள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது. கல்லீரல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளது என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT