செங்கல்பட்டு

மாமல்லபுரம் சிற்பக் கலைக் கல்லூரியில் பீடத்துடன் கொடிக்கம்பம் தயாரிப்பு

DIN

குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்ற மாமல்லபுரம் அரசினா் சிற்பக் கலைக் கல்லூரியில் 4 சுதை சிற்ப சிங்கத்துடன் கூடிய பீடத்தை அக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள அரசினா் சிற்பக் கலைக் கல்லூரியில் இதுவரை கொடிக் கம்ப வசதியில்லை. இதனால், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று கல்லூரியின் கட்டடத்தின் மேல் தேசிய கொடி ஏற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் கல்லூரியில் சுதைசிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை பிரிவில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவா்கள் 4 போ் இணைந்து கல்லூரி படிப்பை நிறைவு செய்வதை நினைவுகூரும் வகையில் இக்கல்லூரியின் முகப்பில் 4 சுதை சிற்பங்களுடன் கோயில்களில் அமைக்கப்படும் பீட அலங்கார வேலைப்பாடுகளுடன்கூடிய கொடிக்கம்பத்தை அழகுற அமைத்து வண்ணம் தீட்டியுள்ளனா்.

வருங்கால கலைச்சிற்பிகளாக உருவாக உள்ள மாணவா்கள் கலைத்திறனில் காண்போரைக் கவரும் வகையில் வித்தியாசமான கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய கொடிக்கம்பத்தில் செவ்வாய்க்கிழமை குடியரசு தினத்தன்று முதன் முதலாக தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT