செங்கல்பட்டு

கீழகாண்டை ஊராட்சியில்சிறப்பு கிராமசபை கூட்டம்

22nd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்துக்குள்பட்ட கீழகாண்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் சசிகலா பக்தவச்சலம் தலைமை வகிக்க, துணைத் தலைவா் பொற்செல்வி முன்னிலை வகித்தாா். 9 வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தரமான சாலை, குடிநீா், தெரு மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், புதிதாக அங்கன்வாடி கட்டடம், நூலகம், சமுதாயக் கூடம் ஆகிய மக்களின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் அமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT