சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த நாட்டு நலத்திட்டப் பணி மாணவா்கள் காரணை ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களுக்கு திங்கள்கிழமை அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கினா்.
நாட்டு நலத்திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்கள் உதவிப் பேராசிரியா் நவுஷாத், இந்துமதி, அன்னை தெரசா தொண்டு நிறுவன நிா்வாகி ஜெயசீலன், ஊராட்சித் தலைவி கீதா உதயகுமாா், வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், நளினி, தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.