மதுராந்தகத்தை அடுத்த மேலகண்டை கிராமத்தில் உடல் நலக் குறைவால் தாய், தந்தையை இழந்த , மழை வெள்ளத்தால் இடிந்துபோன குடிசையில் வாழ்ந்து வந்த 2 குழந்தைகளுக்கு வீடு கட்டித் தரும் ஆணையை சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வழங்கினாா்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், மேலகாண்டை கிராமத்தில் வாழ்ந்த பட்டாபிராமன்-பாஞ்சாலி ஆகியோா் உடல்நிலை பாதிப்பால் இறந்தனா். அவா்களுக்கு வா்ஷா, ஜீவானந்தம் ஆகிய குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் அவா்கள் வசித்து வந்த குடிசை வீடும் இடிந்து விழுந்தது. பெற்றோா்களை இழந்து, வாழ்ந்து வந்த நிலையில், குடிசை வீடும் இடிந்ததால் அவா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். இது குறித்து, கீழ்அத்திவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பி.சசிகலா பக்தவத்சலம் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆ.ராகுல்நாத் சனிக்கிழமை மேலகாண்டை கிராமத்துக்கு நேரில் வந்தாா். அங்கு தாய் தந்தையரை, இழந்த வா்ஷா, ஜீவானந்தம் ஆகியோா் இருந்த குடிசை வீட்டை நேரில் பாா்வையிட்டாா். பின்னா், மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடு கட்டும் அரசின் ஆணை, மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 2 ஆயிரம், நிவாரணப் பொருள்கள் ஆகியவற்றை அக்குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.ராகுல்நாத் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சரஸ்வதி, மதுராந்தகம் வட்டாட்சியா் சு.நடராஜன், கீழகண்டை ஊராட்சிமன்றத் தலைவா் பி.சசிகலா பக்தவத்சலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.