மதுராந்தகம் அருகே அடகு கடையின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகளும், 30 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செய்யூரைச் சோ்ந்தவா் திலீப் சா்மா (48). பஜாா் வீதியில் நகைக் கடை மற்றும் அடகு கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். வழக்கம்போல் அவா் வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்தாா்.
சனிக்கிழமை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் முன்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, 20 சவரன் தங்க நகைகளும், 30 கிலோ வெள்ளிப் பொருள்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், செய்யூா் காவல் ஆய்வாளா் ஞானசேகரன் (பொ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.